பா.விஜய் அவர்களின் ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரிகள்


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே!ஓ மனமே! நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறந்துபொகும் மாயங்கள்
உளிதாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலிதாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருகில்லை போராட்டம்? கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால் அதை தினம் முன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே! ஓ மனமே! நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு


வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்
இலட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி விதைபோடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா? துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால் அது தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே! ஓ மனமே! நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை