இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளமையைத் தேடி

    வயதாகிக் கூனிக் குறுகி கேள்விக் குறி போல வளைந்து  விட்டார் ஒரு முதியவர்.  அவர்  அப்படி  ஆனதற்கு காரணம் புரியாமல் நின்ற நிலையில்  சிறுவன் ஒருவன் அவரைக் கேட்டான் " தாத்தா தரையில் என்ன தேடுகின்றீர்கள்" என்று.  தாத்தா அமைதியாக சொன்னார்.  " காணாமல் போன என் இளமையைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.  தம்பி!  உன்னுடையதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்" என்று.  எனவே இளமை காலத்தை இழந்து விட்டவர்கள் மீண்டும் அதனைப் பெற போவதில்லை. ஆகவே இளைஞர்கள் இளமைப் பருவத்தின் ஒவ்வொரு நொடியும் தங்களின் எதிர்கால மாளிகையின் அடிதளத்திற்குரிய கல்லாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

செய்யும் தொழிலே தெய்வம்

   வழக்கறிஞர் ஒரு சாட்சியை விசாரித்தார். அந்த சாட்சி ஒரு நடிகர்.  வழக்கறிஞர் அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அவர் பெயர் ஊர் என எல்லாவற்றையும் விசாரித்து விட்டு இறுதியாக அவரின் தொழிலைப் பற்றி விசாரித்தார். அவர் தான் ஒரு நடிகன் என்று கூறினார்.  அதற்கு அந்த வழக்கறிஞர் கூறினார் அது அவ்வளவு நல்ல தொழில் இல்லையே என்றார்.   அதற்கு அந்த நடிகர் கூறினார் அது என் தந்தையின் தொழிலை விட சிறந்தது என்று. வழக்கறிஞர் அவரின் தந்தையின் தொழில் என்ன என்று விசாரித்தார்.  அவரும் உங்களைப் போல ஒரு வழக்கறிஞர் தான் என்றார் அவர்.       தொழில் மேல் கொண்ட பற்று அந்த நடிகரைக் காப்பாற்றியது.