கிப்ரான் சொன்ன உருவக கதை

  

  ஒரு ஊரில் ஆத்திகர் ஒருவரும் நாத்திகர் ஒருவரும் இருந்தனர். ஆத்திகர் மக்களிடைய தன் கருத்தைப் பகிர மக்கள் அனைவரும் அதுவே சரி என நினைப்பார்கள். இவர் பேசி முடித்த அடுத்த நொடியே நாத்திகர் வந்து தன் கருத்தைப் பகிர  அதுவும் சரி என மக்களுக்குத் தோன்றியது. நாள்தோறும்  இவ்வாறே தொடர்ந்த நிலையில் மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஒரு முடிவு எடுத்தனர். இருவரையும் ஒரே மேடையில் வாதம் செய்ய அழைத்தனர். 
 
   இருவரின் வாதமும் தீப்பொறியாய் இருந்தது. பின் வாதத்தின்  முடிவில் ஆத்திகர் நாத்திகராகவும் நாத்திகர் ஆத்திகராகவும் மாறினர். 
     
   தன் கொள்கையில் பிடிப்பில்லாத ஒருவரால் அதில் நிலைத்து நிற்க முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை