இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இளமையைத் தேடி

    வயதாகிக் கூனிக் குறுகி கேள்விக் குறி போல வளைந்து  விட்டார் ஒரு முதியவர்.  அவர்  அப்படி  ஆனதற்கு காரணம் புரியாமல் நின்ற நிலையில்  சிறுவன் ஒருவன் அவரைக் கேட்டான் " தாத்தா தரையில் என்ன தேடுகின்றீர்கள்" என்று.  தாத்தா அமைதியாக சொன்னார்.  " காணாமல் போன என் இளமையைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.  தம்பி!  உன்னுடையதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்" என்று.  எனவே இளமை காலத்தை இழந்து விட்டவர்கள் மீண்டும் அதனைப் பெற போவதில்லை. ஆகவே இளைஞர்கள் இளமைப் பருவத்தின் ஒவ்வொரு நொடியும் தங்களின் எதிர்கால மாளிகையின் அடிதளத்திற்குரிய கல்லாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

புகைப் பழக்கமும் மதுபழக்கமும் சிறுகதை

   பெர்னாட்சாவின் தந்தை பெரிய குடிகாரர்.  ஆனால் பெர்னாட்சா மறந்தும் மதுவைத் தீண்டாதவர். நீங்கள் ஏன் குடிப்பதில்லை?  என்று பெர்னாட்சாவை ஒருவர் கேட்டார்.  அதற்கு அவர் " நான் குடிக்க வேண்டியதை எல்லாம் என் அப்பா குடித்து விட்டார்.  ஆகவே நான் குடிக்கவில்லை " என்றார்.  அப்பா குடிகாரர் என்பதால் மகன் குடிகாரராக இருக்க வேண்டும் என்பதில்லை.  ஆனால்  ஒரு தந்தை தன் மகன் தன்னைப் பார்த்து குடிக்கக்கூடும் என குடிப்பழக்கத்தை நிறுத்திவிடலாம்.       விடாமல் புகை பிடிக்கும் ஒருவர் கூறுகையில் " நான் சிகரெட் காக  செலவழித்ததை எல்லாம் வைத்திருந்தால் ஒரு வீடு கட்டி இருக்கலாம் இன்று முதுமையில் எனக்கு வீடில்லை.  உடம்பில் ஆரோக்கியம் இல்லை.  ஆனால் நான் அவற்றுக்காக வருந்தவில்லை.  என் மகன் இப்போது  சிகரெட் பிடிப்பது பார்த்து தான் நான் மனதிற்குள் அழுகிறேன். 

செய்யும் தொழிலே தெய்வம்

   வழக்கறிஞர் ஒரு சாட்சியை விசாரித்தார். அந்த சாட்சி ஒரு நடிகர்.  வழக்கறிஞர் அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அவர் பெயர் ஊர் என எல்லாவற்றையும் விசாரித்து விட்டு இறுதியாக அவரின் தொழிலைப் பற்றி விசாரித்தார். அவர் தான் ஒரு நடிகன் என்று கூறினார்.  அதற்கு அந்த வழக்கறிஞர் கூறினார் அது அவ்வளவு நல்ல தொழில் இல்லையே என்றார்.   அதற்கு அந்த நடிகர் கூறினார் அது என் தந்தையின் தொழிலை விட சிறந்தது என்று. வழக்கறிஞர் அவரின் தந்தையின் தொழில் என்ன என்று விசாரித்தார்.  அவரும் உங்களைப் போல ஒரு வழக்கறிஞர் தான் என்றார் அவர்.       தொழில் மேல் கொண்ட பற்று அந்த நடிகரைக் காப்பாற்றியது.

தீமைகளில் பழகிவிட்டால் மீள முடியாது சிறுகதை

படம்
       முனிவர் ஒருவர் பன்றிகளைத் தூய்மைபடுத்த நினைத்தார்.  தூய்மையான வாழ்க்கையை அவற்றுக்குக் கற்பிக்க கருதினார்.  முனிவராக இருந்து சொன்னால் அவை கேட்குமா?  எனவே தன் மகனை அழைத்து கூறினார், "மகனே!  நான் பன்றிகளைத் திருத்த வேண்டும். எனவே நான் பன்றியாக உருமாறி வாழ போகிறேன்.  சில நாள் கழித்து வந்து என்னை மீட்டெடுத்துக் கொள்" என்று கூறிவிட்டு சென்றார்.  முனிவர் பன்றியாய் மாறி அவற்றின் உலகில் வாழ்ந்தார்.   சேற்றில்  அலைந்தார், தெருவில் அலைந்தார்,  புழுதியில் குளித்தார்,  மலமும் தின்றார்.  மாமுனிவர்க்குரிய குணங்கள் அவரிடம் இருந்து மறைந்தன.  மகன் சிலநாள் கழித்துத் தந்தையைத் தேடி வந்தான்.  அவனிடம் முனிவர், "மகனே!  இந்த வாழ்வில் நான் பழகிப் போனேன்.  இனி இதை விடமுடியாது.  நீ போய்வா" என்று கூறிவிட்டார்.            தீமைகளில் பழகிவிட்டால் மீளமுடியாது.  இதனை உணர்ந்து நம் வாழ்வில் தீமைகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் . 

Good morning 😊wishes 😍

படம்

இனிய இரவு வணக்கம்

படம்

Happy children's day

படம்
                                                       மழலை  சொல் என்றும் பொய்யுரைப்பதில்லை                                                                  மழலை குரல் போல் இனிதாவதில்லை                                                                                           உண்மையான அன்பும்                                                                                      கள்ளங்கபடமற்ற சிரிப்பும்                                                                                      இயற்கையின் அதிசயமும்                                                                                                     மழலைகளே!!!

Butterfly photo

படம்

Beauty of nature photography

படம்

Brother and sister relationship quotes

படம்