வீறு கொண்டெழு மனமே! கவிதை




 வீறு கொண்டெழு மனமே! 


நேற்றைய கவலையை எண்ணி

இன்றைய அமைதியை இழந்து

நாளைய வாழ்வைத் தொலைக்காமல் இருக்க


வீறு கொண்டெழு மனமே!


தோல்விக் கண்டு சலித்துக் கொள்ளாமல்

வெறுமையை நினைக்காமல்

வெற்றியை நெருங்க


வீறு கொண்டெழு மனமே!


நீ போகும் பாதை முட்களாகலாம்

பழகும் சொந்தத்தால் சோகம் நேரலாம்

தடைகளைத் தாண்டி தைரியமாக வாழ


வீறு கொண்டெழு மனமே!


உலகம் உன்னை கேலி பேசலாம்

உழைக்கும் கரங்களில் வலிகள் கூடலாம் 

ஊக்கம் கொண்டு நீ எழ


வீறு கொண்டெழு மனமே!


துயரம் கண்டு துவளாமல்

துக்கம் என்று அஞ்சாமல்

சாதிக்க துணிந்த மனிதனாய்


வீறு கொண்டெழு மனமே!


வெட்டிப் பேச்சைக்  கேளாமல்

வீண் வேலை செய்யாமல்

சரித்திரம் படைக்க


வீறு கொண்டெழு மனமே!


உன்னை புரிய நீ போதும்

உன்னை அறிய 

வெளி உலகம் வேண்டாம்

உன்னுள் தேடு

உண்மையைத் தெரிந்து கொள்

வானம் உனக்கு வசப்படும்

மனதிற்குள் குயிலிசைக்கும்

ஆனந்தம் உன்னை வருட

வாழ்க்கையை இன்னும் அழகாக்க


வீறு கொண்டெழு மனமே!

வீறு கொண்டெழு மனமே!

வீறு கொண்டெழு மனமே!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை