இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக தொலைக்காட்சி தினம் நவம்பர் 21

படம்
          உலக தொலைக்காட்சி தினம் , தொலைக்காட்சி உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தும் மிக முக்கியமான உணர்ச்சி ஊடகமாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இருந்து வருகிறது. அத்தகைய தொலைக்காட்சியைச் சிறப்பு செய்யும் வகையில் தொலைக்காட்சி தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மீனவர்கள் தினம் நவம்பர் 21

படம்
             உலக மீனவர்கள் தினம், மத்திய அமைச்சக மீன்வளத்துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல இடையூறுகளுக்கு இடையிலும் தன் தொழிலை திறம்பட செய்யும் மீனவர்களைச் சிறப்பிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.       2020 நவம்பர் 21 க்கான கருப்பொருள்: Social Responsibility in the Fisheries value chain.    2020ம் ஆண்டிற்கான இந்தியாவிலேயே மீன் வளத்துறையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் உத்திர பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. வட மாநிலங்களில் சிறப்பாக மீன் வளத்துறையில் செயல்பட்ட மாநிலமாக அஸ்ஸாம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  

தமிழின் சிறப்பு

படம்
  "சொல்லவுங் கூடுவ தில்லை - அவை           சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த           மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!           இந்த வசையெனக் கெய்திட லாமோ!  சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்        செல்வங்கள் யாவும் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்        தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் ! இறவாத புகழுடைய புதுநூல்கள்       தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் ! மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்        சொல்வதிலோர் மகிமை யில்லை!  திறமான புலமையெனில் வெளிநாட்டோர்      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

படம்
  தீபங்களின் அழகும் வான வேடிக்கையுடன் இனிப்புடன் கூடிய  தீபத்திருநாள் வாழ்த்துக்கள் 

உலக கருணை தினம் நவம்பர் 13

படம்
        உலக கருணை தினம் நவம்பர் மாதம் 13ம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கருணையான உள்ளங்களை சிறப்பிப்பதே இந்நாளின் நோக்கம் ஆகும்.  அன்பு, கருணை போன்ற செயல்களால் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அன்னையின் கருணை ஆறுதல் கொடுக்கும் ஆண்டவன் கருணை அகிலம் காக்கும் இயற்கையின் கருணை நிம்மதி அளிக்கும்  ஈதலின் கணக்கே கருணையாய் மாறும் உண்ணும் உணவும் அனைவருக்கும் என்பர் ஊனமின்றி மனதை கொண்டவர் ஏக்கம் தணித்து தனிமையில் துணை நிற்பவர் ஐவிரல் கொடுத்து தோள் கொடுப்பவர் ஒன்றுக்கு இரண்டாய் நன்மை செய்பவர் ஓதிய கல்வியை மறவாதவர் ஔதடமாய் காப்பவர் அவர் பெயரே கருணை... 

தேசிய நிமோனியா தினம் நவம்பர் 12

படம்
         நிமோனியா என்பது நுரையீரலில் சளி உறைவதால் ஏற்படக் கூடிய நோய் ஆகும். முதியவர்களையே அதிகம் தாக்கும் தன்மை உடையது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.       இதற்கான தடுப்பூசியை தக்க சமயத்தில் போட்டுக் கொண்டால் நோயைத் தடுக்கலாம் என்னும் விழிப்பணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய நிமோனியா தினம் நவம்பர் 12ம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது. 

November 11 தேசிய கல்வி தினம்

படம்
        National Education day , தேசிய கல்வி தினம் நம் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அவர்களின் பிறந்த நாள் அன்று கொண்டாடப்படுகிறது.  சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆவார் . நேரு(சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்)  மற்றும் அபுல்கலாம் ஆசாத் அவர்களால் பல உயர்க்கல்வி நிறுவனங்கள் மற்றும் IIT நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.    ஆதலால்,  நவம்பர் 11 மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.     ஏழை எளிய மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. 

தன்னம்பிக்கையின் ஊற்று ஹெலன் கெல்லர்

படம்
  இவ்வதிசயப் பெண்ணின் வாழ்க்கையைப் படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னம்பிக்கை ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடும் என்பது உண்மை.     ஹெலன் அமெரிக்காவில் உள்ள சிறிய நகர் ஒன்றில் பிறந்து, பெற்றோரின் முதல் குழந்தையாய் செல்ல குழந்தையாய் வளர்க்கப்பட்டார்.      ஹெலனுக்கு இரண்டு வயது வரும் வேளையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் பார்வை,  கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை இழந்தார்.  அதன் பின்னர் சல்லிவன் என்ற ஆசிரியரின் துணைக் கொண்டு ஒவ்வொன்றையும் கற்க ஆரம்பித்தார்.     ஹெலன் கெல்லரை எட்டாவது அதிசயம் என்றே கூறலாம். வாழ்க்கையில் இருளைத் தவிர, சோகத்தைத் தவிர எதையும் அறியாத சிறுமி, துணிவு என்ற மருந்தைக் கொண்டு தன் நோயை விரட்டி,  முயற்சி செய்து ஓரளவு பேசும் சக்தியை பெற்றார்.  தமது 24வது வயதில் முதுகலை பட்டம் பெற்றார்.     1908ம் ஆண்டு 'நான் வாழும் உலகம் ' என்ற நூலை எழுதினார்.  தொடும் உணர்ச்சி மோப்பம் இவற்றைக் கொண்டே என் உலகம் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.     உலகெங்கும் இருந்த பார்வையற்றோர் அமைப்புகளில் எல்லாம் ஏதோ ஒரு பொறுப்பு ஹெலனைத் தேடி வந்தது. அமெரிக்காவில் உள்ள பார்வையற்ற

பெண் சுதந்திரம் கவிதை

படம்
  பெண்ணே... நீ அனைத்து சுதந்திரங்களும் பெற்றவள் தான் உன் பிறப்பிற்கு சுதந்திரம் உண்டு-ஆனால் உன் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாதது கல்வி சுதந்திரம் உண்டு கற்க மட்டுமே உன்னிடம் உரிமை உள்ளது கருத்தைப் பகிர அல்ல பணிக்குச் செல்ல சுதந்திரம் உள்ளது-ஆனால் செலவு செய்யும் உரிமை இல்லை விரும்பியவரைக் கைபிடிக்கும் சுதந்திரம் உள்ளது ஆணவ கொலைகளும் உள்ளன நீ பூமியாய் நதியாய் போற்றப்படுவாய் மற்றவர் விரும்பும் படி நீ வாழுகையில் உனக்கு பறக்க சிறகுகள் தரப்படும் கூண்டுகளோடு கூடிய சிறகுகள் பல துறைகள் கற்பாய் அனைத்தையும் சமையலறையில் செலவிட அனைத்தையும் மீறி எழும் பெண்கள் பல அவர்களில் வெற்றி காண்பவரோ சில நீயோ!வானத்தில் தெரியும் நட்சத்திரம் போல் அனைவரும் தொலைவில் நின்றே உன்னைப் பார்க்கின்றனர் அருகில் வரும் வேளையில் தெரியும் நீ எவ்வளவு பெரிய சக்தி என்று சின்னஞ்சிறு கதைகள் பேசி கல்வி கற்க தகுதி இல்லாதவலாய் இருந்த பெண்கள் என்பது அந்தக்காலம் அண்டைவீட்டாரையும் நம்ப முடியாமல் தொடுதல் முறைகளை கற்றுக் கொடுப்பது இந்தக்காலம் அடிமைத்தனமும் மாறவில்லை அடக்குமுறையும் மாறவில்லை உண்மையில் நீ அடிமைபட்டுள்ள களம்தான் மாறியுள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) திட்டம் நோக்கம் மற்றும் சேமிப்பு

   மத்திய அரசின் அஞ்சல் துறை நடத்தும் 136 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க காப்பீடு அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) . இது 01-02-1884ல் அப்போதைய டைரக்டர் ஜெனரல் ஆப் போஸ்ட் திரு  F. R. ஹாக் அவர்களால் அஞ்சல் ஊழியர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.     பின்னர் இந்த திட்டத்தின் மூலம் மத்திய/மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரிவோர்,  அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர் என ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் பயன்பெற்று வந்தனர்.       தற்போது மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  Minimum sum assured Rs. 20000 Maximum sum assured Rs. 50,00,000 

தோல்விகள்

        தோல்விகள் உன்னை விழ வைக்கும் ஆபத்தல்ல,  வாழ்வில் பல அனுபவங்களைத் தந்து வெற்றிக்கு ஏணியாய் அமையும் உக்தி. தோல்வியைக் கண்டு துவண்டு விடுதல் கூடாது.  தோல்வியை வலிக் கல்லாய் கருதாமல் படிக்கல்லாய் கருதுபவனே வெற்றியாளன் ஆகிறான். நல்ல சிந்தனையும் நேர்கொண்ட மனமும் வெற்றியை நோக்கி செல்வதற்கான வழிகள்...... 

உலக தைராய்டு தினம் // மே 25

  ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி உலக தைராய்டு தினம் ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடலில் அயோடின் அளவு குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. தைராய்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக தைராய்டு தினம் தைராய்டு சர்வதேச கூட்டமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது . 

May 20 rajiv gandhi death day

படம்

காலை வணக்கம்

படம்

May 20 // மே20 உலக அளவியல் தினம்

படம்

இனிய இரவு வணக்கம் // good night with quote

படம்

மே 19 இன்று

படம்
    மே 19 பயங்கரவாதத்திற்கு எதிரான நாளாக அனுசரிக்கப்படுகிறது.         

உலக அருங்காட்சியக தினம் மே 18

படம்
உலக அருங்காட்சியக தின ஆண்டும் கருப்பொருளும்

கொள்ளை நோய்கள்

கொள்ளை நோய்கள் உயிர்களைப் பறிப்பவை. முன்பு விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு வந்த நோய்களெல்லாம் இன்று மனிதனிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவுகின்றன.     ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு கொள்ளை நோய்கள் உதயமாகின்றன.  இவை மனிதனுக்கு மனிதன் இடம் மாறுபவை. முதலில் பிளேக் என்னும் கொள்ளை நோய் உதயமானது, பல நாடுகள் வரை பரவி பல பெயர்கள் கொண்டு ஏராளமான மக்களின் உயிரைப் பறித்து.     இது போன்றே கருப்பு காய்ச்சல்,  காலரா, எய்ட்ஸ் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்கள் ஒவ்வொரு நோயால் அவதிபடுகின்றனர்.  கொள்ளை நோய்கள் என்றால் என்ன?        மிக குறுகிய காலத்தில் அதிகம் பரவி ஏராளமான மக்களின் உயிரைக் கொல்லும் நோய் ஆகும். 

பிரிவு நிரந்தரம்

எல்லாவற்றிற்கும் எல்லை என்பதுண்டு மரணம் மறுக்க முடியாத ஒன்று இன்று உன்னுடன் இருக்கும் யாரும் நாளை இருப்பார்கள் என சொல்ல முடியாது காலங்களும் நேரங்களும் மாற மாற மனித மனமும் மாறி விடுகிறது

தருமக்கு மார்கண்டேய மகரிஷி கூறிய கதை

மிதிலை நகரம் மிகுந்த செழிப்புடன் விளங்கியது. குடிமக்கள் அனைவரும் நலமாய் இருந்தார்கள். நகரை அடைந்த கௌசிகன்,  தருமவியாதனை எங்கே காணலாம்?  என்று விசாரித்தார். ஏனெனில், தரும வியாதன் மிகப்பெரும் என ஒரு பெண் சொன்னதைக் கேட்டு கௌசிக முனிவர் அவரைப் பார்க்க வந்தார். பிறகு அவன் இருக்கும் இடத்தைத் தெரிந்துக் கொண்ட கௌசிகன் அங்கே போனான்.  அப்போது தரும வியாதன் கசாப்புக்கடை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இறைச்சி வாங்குவோர் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தான். வேலை முடிந்ததும்,  பிராமணன் ஒருவன் தனக்காக காத்திருப்பதைக் கவனித்த தருமவியாதன் பரபரப்புடன் எழுந்து கௌசிகனிடம் வந்தான்.  பிராமணரே!  நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.  தரும வியாதன் அவனிடம், "பிராமணரே! இந்த இடம் உனக்கு ஏற்றதன்று. உமக்கு விருப்பம் இருந்தால் நம் வீட்டிற்குப் போகலாம் வாருங்கள் "என்று சொல்லி தருமவியாதன் அவனைத் தனது வீட்டுக்கு அழைத்துப் போனான்.  வீட்டை அடைந்ததும் கௌசிகனை முறைப்படி அவன் உபசரித்தான். அப்போது கௌசிகன் தருமவியாதனிடம் " ஐயா!  ஹிம்சையான இந்தத் தொழிலில் நீர் ஈட

நட்பு கவிதை

ஒன்றாக பிறக்கவும் இல்லை ஒன்றாக வளரவும் இல்லை - ஆனால் நீ தந்த நினைவுகள் ஒரு சிறு புன்முறுவலாய் என்னிடம் தஞ்சம் கொண்டது

Happy pongal

படம்
https://ryogaraj.blogspot.com Pongal rangoli தமிழர் திருநாளாம் தை முதல் நாளாம் விவசாயத்தைப் போற்றி இனிதே துவங்கும் தை திங்களைப் போற்றிடுவோம் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்