நூல்களே அறிவின் திறவுகோல்

நூல்களே அறிவின் திறவுகோல்
நூல்கள் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை.மக்களின் வாழ்க்கை முறை,நாகரிகம் இவற்றையும் முன்னோர்களின் வாழ்க்கை முறை பற்றியும் அறிய உதவுகிறது. நமக்கு தெரியாது நம் வயதிற்கு எட்டாத பல நிகழ்வுகளை நூல்கள் நமக்கு கற்றுத் தருகிறது. ஒவ்வொரு நூலும் மக்களுக்கு அறிவுரையையும் வாழ்வியலின் நெறிமுறையையும் உணர்த்தும்.மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் எவ்வாறு வாழ கூடாது என்பதை நூல்கள் மூலம் தெளிவாக அறியலாம்.ஒரு நல்ல மனிதன் சிறந்த புத்தகத்தின் மூலம் உருவாகிறான்.நூல்களே வெற்றியின் சிறப்பையும் தோல்வியினால் கிடைக்கும் அனுபவத்தையும் உணர்த்துகின்றன.வாழ்க்கை என்பது ஒரு  புத்தகம் அதில் ஒரு பக்கம் மட்டும் வாழ்க்கை அல்ல ஒவ்வொரு பக்கங்களானதே வாழ்க்கை.
"புத்தகங்கள் இல்லை என்றால் சரித்திரம் இல்லை".தலை குனிந்து நீ புத்தகத்தைப் பார்த்தால் புத்தகம் உன்னை தலை நிமிர்ந்து நடக்க வைக்கும். நூல்கள் தான் கற்பனையை உருவாக்கும் கற்பனை அறிவைப் பெருக்க உதவும் அறிவு தான் உன்னை சிறந்த மனிதனாக உருவாக்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை