சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம். முத்தமிழ் காப்பியம், முத்தமிழ் நாடுகளின் நாடகமாக காட்டிய காப்பியம். சிலப்பதிகாரம் தோன்றிய காலம் கி.பி.2ம் நூற்றாண்டு. தெய்வங்களையும் அரசர்களையும் தலைவராகப் பாடப்பட்ட காலத்தில் சாதாரண மக்கள் பற்றிய வாழ்க்கையை உணர்த்திய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அதனால் தான் அதை குடிமக்கள் காப்பியம் என்றுக் கூறினர்.
சிலப்பதிகாரம் 3 காண்டங்கள் மற்றும் 30 காதைகளையும் உடையது. புகார்க்காண்டம் 10 காதைகளையும், மதுரைக்காண்டம் 13 காதைகளையும், வஞ்சிக்காண்டம் 7 காதைகளையும் உடையது.
காதை
         காதை என்னும் தலைப்பில் உள்ளவை 22. வரி என்ற தலைப்பில் 2ம், பாாடல் என்ற தலைப்பில் 1  ஆக முப்பது.
சிலம்பு
        ஒலி, மகளிர் காலணி வகைை, பூசாாரிகளின் கைச் சிலம்பு, மலைை, பக்கமலை, குகை  போன்ற பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி தருகின்றன.
       சிலம்பு என்ற சொல் சிலப்பதிகாரத்தில் காலணி என்ற பொருளில் 41 இடங்களிலும் மலை என்ற பொருளில் 3 இடங்களிலும் பயன் பெற்றுள்ளது.
கண்ணகி
     கண்ணகி 8 ஆண்டுகள் கோவலனோடு வாழ்கிறாள். குழந்தைகள் இல்லை. பின் 12 ஆண்டுகள் மாதவியுடன் வாழ்கிறான். பின் தன் தவறை உணர்ந்து கண்ணகியை வந்தடைகிறான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை