கந்தர்வன் கவிதைகள்

கந்தர்வன் கவிதைகள்:
குடைகள்:
வெண் கொற்றக் குடைநிழலில்
                          ரோஜாச் செடிகள்
                 வெயிலுக்குத் தவமிருக்க
                           மானிடப் பயிர்கள்
                            மழையில் நனைந்து
ஒரு கறுப்புக் குடை வேண்டிக்
                          கனவு காண்கின்றன.

விடுகதை:
இந்த தேசத்திலேயே
மிகவும் உயர்ந்தவன்
கிராம வாசியா
நகர வாசியா

இல்லை
விலைவாசி.



இல்லை:

உழுபவனுக்கு நிலமில்லை
உழைப்பவனுக்கு வேலையில்லை
எங்கள் தேசத்தின் பரப்புக்கும்
எல்லையே இல்லை.

கொள்ளைகள்:

என் வீட்டில் இன்று
இருநூறு பவுன் நகை
கொள்ளை போனது

ஏது இவ்வளவு நகைகள்?
எல்லாம் என் மனைவிக்கு
மாமனார் போட்டவை.

அவ்வாறெனில்
இன்று நடந்தது
மூன்றாவது கொள்ளை.

பெண்:

தங்கத்தில் சுவர் வைத்து
வைரத்தில் வாசல் வைத்தாலும்
அவள் வைக்கப்பட்ட இடம்
சிறையல்லவா.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை